16 September 2011

குழந்தை தொழிலாளிகள்



சிந்தனை செல்வங்களாய்
எழ வேண்டிய சிறுவர்கள்
நித்தம் கூலிக்காக
உயிரை விடுவதா...

பேனா பிடிக்க வேண்டிய
கைகள் தீக்குச்சி கம்புகளை
பிடித்து தேய்ந்து போவதா …..

புத்தகங்களை படிக்க வேண்டிய
கண்கள் இரும்பு கம்பிகளை
பார்த்து கண்களை இளப்பதா....

பள்ளி செல்ல வேண்டிய
கால்கள் பட்டாசு அலைக்கு
செல்வதா ….

பாடம் கற்க வேண்டிய வயதில்
கால் வயிற்றை நிரப்பிட
செங்கல் ஆலைக்கு செல்வதா...


தொழிலாழிக்கு
எட்டு மணி நேரம் வேலை
பெற்று தந்ததே
மே தினம்….
.
  ஆனால்
  சிறுவர்கள்  என்றால்……

ஒவ்வொரு வீட்டில் எரியும்
தீபங்களிலும்
உங்கள் முகம் தானே தெரிகின்றது……

ஒவ்வொரு விழாக்களிலும்
வெடித்து சிதறுவது உங்கள்
வியர்வை துளிகளும்
இரத்தங்களுமே…..

ஏ முதலாளி வர்க்கங்களே…!
குழந்தைகளை வேலைக்கு
அமர்த்த கூடாது என்று
சட்டங்கள் இருந்தும்
உங்கள் பணம் தான்
சட்டங்களை மூடிவிட்டதோ…..

ஏ சமுதாயமே !...
     குழந்தைகளை சமைத்து உண்டது
                போதும்
         அவர்களை விட்டுவிடுங்கள்………

5 comments:

  1. விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்தப் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி . இந்தப் பதிவில் இணைத்திருக்கும் படமே பல கதை சொல்கிறது . அருமை

    ReplyDelete
  2. நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete
  3. Correct yourself pal! No cracker is made using children. There are about 15 big schools run by our community! If a teenager distribute newspaper in US will be dignity of labour. If the same teenager assist his father/mother in his/her profession is child labour in India! i salute your hypocrisy.

    ReplyDelete
  4. How do you see fishemen's kids assisting their parents? Why your Bishops, never advice your fishermen not engage their children in fishing? Instead of churches they should open more schools to educate those poor kids!

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...