03 October 2011

சிறு கவிதை


அவளின் நினைவுகள் கூட
இன்று எனக்கு சுமை தான் 
என்றாவது என்னவள் 
அறிந்து விடுவாளோ என்று..
*************************************************************************

நினைவுகளில் நீந்தும் 
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும் 
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
*************************************************************************

எது நிஜம் என்று
தெரியாது....

தெரியாத ஒன்றை தேடியே 
விடை தேடி அலைகின்றான் 
புரியாதவனாய்....
*************************************************************************
ஆசைகள் இல்லாத
மனிதன் எங்கே....?
தேடுகிறேன்...
அதுவும் ஒரு ஆசை தானே.....
*************************************************************************

சித்திரமும் பேசிட
சிக்கிக் கொண்டான்...

சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு 
கீறல் விழுந்த சிலையாய்------
*************************************************************************

சுவடுகள் இல்லாத
மனிதம் இது

தேடுவதோ
          மரணமில்லா
                             வழ்வை……..
*************************************************************************

வழி தேடும் கண்கழுக்கு
காதல் ஒரு
பாவம் என்றால்----
கிழிந்த காகிதமாய் போயிடுவாய்----
உன் வாழ்வும் இங்கு
தண்ணீரில் மிதக்கும்
காகித கப்பலை போல----

2 comments:

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...