விண்ணில் மிதகும்
விண் மீன் என
என் அவளின்
நினைவோடு---
எனது
காதலர் தினம்…
ஒவ்வொரு முறையும்
ஏமாந்து போகிறேன்…
அவளின் கனவுகளில் மட்டும்
உரையாடிக் கொண்டு…
இந்த முறையாவது
என் நினைவுகளில்
வந்து சொல்லிடுவளோ
அந்த முன்று வார்தைகளையும்
இல்லை
ஏமாந்து விடுவேனோ!...
காத்திருக்கிறேன்
கையில் மலரை
வைத்துக் கொண்டு….
அலைகளின் ஓசையும்
அடங்கவில்லை
நம்பிக்கை
ஒரு புறம்….
பதட்டம்
மறு புறம்….
என்ன சொல்ல போகிறாள்
என்று
இம்முறையும்
கனவுகள் மட்டும்
எனக்கு
சொந்தம் ஆகிடுமோ
இல்லை
அவள் என் சொந்தம்
அகிடுவாளோ...
நண்பர்களாய் மட்டும்
பேசிக் கொண்டோம்…..
காதலனாய் என்று?...
என் உயிரையே
அவளுள் புதைத்து விட்டேன்…
வாழ்வது
நான் அல்ல
அவளுள் என் உயிர் வாசம்….
கனவுகளோடு
காத்து இருக்கிறேன்
அவளின் பதிலுக்காக
Ferbuary14
எனறும்
என் ௨யிர் வாழும்
என்
இனிய காதலின்
முச்சி காற்று
No comments:
Post a Comment