06 December 2011

காதலின் நினைவு

வசந்த காலம்
அது என் இளமை காலம்
வசந்தங்கள் வீசிய பொற்காலம்
எனக்கென்று ஒரு பரிசாய்
இறைவன் கொடுத்த
அன்பு தேவதை அவள்

வானில் பூத்த
 நட்சத்திரங்களாய
அவள் இதய வாசல் திறந்திட
புதிதாய் பிறந்த உணர்வு

ஏதோ....
பாலைவனத்தில்
ஒரு துளி தண்ணீர்
கிடைத்த இன்பம்....

கடிதங்கள் பல எழுதினோம்....
சுவாசங்களாய் வாழ்ந்தோம்....
கற்பனை உலகில் மிதந்த்ட
காதல் தோணியாய்
நானும் அவளும்

“என்னோடு அவள் வாழ்வு”


என் வாழ்வின் அர்த்தம்
சொல்லிய அவளோடு வாழ்த்திட
இன்றும்
கடிதங்கள் எழுதுகின்றேன்
அவளின் கல்லறைக்கு
கனவில் மட்டுமாவது
வந்து விடுவாளோ
என்று எண்ணியே..!..

1 comment:

  1. Oh! Sokam.....
    Vetha.Elangathilakam
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...