21 December 2010

சுழலில் சிக்கிய வாழ்வு

சிந்தனை 
செல்வங்கள் 
எங்கே ?...

சிந்தும்
கண்ணீரும் 
எங்கே ?...

சீதையை தேடி 
வந்த ராமனும் 
எங்கே ?...

சீதனம் கொடுக்க
லெட்சுமியும் 
இல்லையே !....

வரண் கேட்டு 
வந்தவர்கள்
குணம் கேட்காமல்
பணம் கேட்டு 
எங்கோ ?....

வானில் பூத்த
மலராய் அவழ்---
சூடிட யார் ?.....

சுழலில் சிக்கிய
படகாய அவழ்---
மீட்டிட யார் ?....

கீறல் விழுந்த
சிலையாய் அவள்---
செதுக்கிட யார் ?....

புன்னகை
பூ பூத்தவள்---
                
இன்றோ---
கண்ணீரால் 
தன் வாழ்வை
தொலைத்து

கொண்டாள்.....    
      ௨திராத மலராய்— 
                                                                                                                       

1 comment:

  1. அருமையான வரிகள்
    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...