24 January 2011

காதலின் வேதனை


என் இனிய தென்றலே

நீ வீசிடும் நேரத்தில்

உன்னை தூற்றி கொள்ளவில்லை……

நீ இல்லா நேரத்தில்

இந்த அழகிய விழக்குகள்

வா வா என்று முத்தமிடுவதேன்…….

வாய் விட்டு அழவும் தெரியவில்லை

நீ வீசிடும் இந்த பொழுதை

மறக்கவும் முடியவில்லை…….

காதோரமாய் இனிய பாடல்கள்

என் நினைவுகளை

வருடிக்கொள்வதா-------

போதும்

நிறுத்தி விடு

என் உள்ளே

நான் மட்டுமாய் ஆசை படுகிறேன்

ஆனால்

ஏனோ தெரியவில்லை

என்றும் உன் நினைவால்

வாழ்வை இழந்திடுவேனோ……?......

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...