ரத்தத்தின் நிறம்
ஒன்று தானே--
அதை
பார்க்க துடிப்பதேன்…..
மனிதா---
மதம் என்னும்
பெயரைச் சொல்லி
நித்தம் ரத்தம் உறிஞ்சும்
புழுவாக இராதே----
உயிர் கொடுக்கும்
பெலிக்கான்
பறவையாக இரு…
தெய்வம் ஒன்று தானே….
மனிதா----
நீ மட்டும்
ஏன்
கொண்டாய்……
மதம் என்னும்
பெயரைச் சொல்லும்
மத வாதிகள்
தினம் அதன் பெயரால்
உயிரை எடுப்பதா…!
“ஆண்டவனுக்கு
சொந்த மான உரிமையை
மனிதா
நீயே கையில் எடுத்தால்…!..”
சூரியனை போல
ஒழிர வேண்டிய
இழைஞன் மனதில்
மதம் என்னும்
விஷத்தை கலப்பதா---!
திசை திருப்புவதா---!
தீவிரவாதி ஆக மாற்றுவதா---!
வழிகாட்ட
நல்ல வழிகாட்டி
கிடைத்திருந்தால்
இவனும்
அப்துல்கலாம் ஆகியிப்பானே…..!
No comments:
Post a Comment