28 November 2011

ஹைக்கூ கவிதைகள்


எனக்கு தெரியும்
நீ விரும்புவது
என்னை அல்ல....
என் உயிரை என்று---
                    ---ரோஜா செடி
*****************************
நீ இன்றி
நான் அழகு இல்லை
என்பது எனக்கு தெரியும்
                          ---வண்டுகள்
*****************************
அவளின் நினைவுகள்
மட்டும் போதுமே
நான் வாழ்த்திட
                   ---காதல்
*****************************
நீ என்னை விட்டு பிரிந்திட
உன் நிழலாக
நான் இருப்பான்
                  ---கல்லூரி
*****************************
சொறூட்ட நானா உனக்கு
மழலையோடு
கதை சொல்ல
              ---நிலா
*****************************
உன் பிம்பம் என்மேல் பதிய
அலங்கரித்து கொண்டாய்
உன் நிழலாக
நான் இருப்பதில்லை
நிஜத்தில்
நான் ஒரு
      ---கண்ணாடி
*****************************
உனக்கு நிழலாய்
நான் இருக்க
என்னை அழிப்பது ஏன் ?..
                                ---மரம் 
*****************************

18 November 2011

ஏ நிலவே!...

ஏ நிலவே..!....
          மஞ்சள் நிறத்தவளாய்
          ஆடை அணிந்திட
          அந்தி சாயும் நேரமிது----
                      வெட்கத்திலே
                              புது பெண்ணாய்---
          மெல்லிய தலையை தூக்கி
          எழுந்தாயே----
          உன்
          வருகை கண்டு
          நட்சத்திர பட்டாளங்கள்
          படை எடுத்து நிற்கின்றன....
                      மண மகளாய்
                            உன்னை வரவேற்க....
          உன் கரங்களாய்
          இதோ!---
                      மேகங்கள்
                           உன்னை ஒளித்து கொள்ள....
          ஆனால்
          நீ ஒளிந்து கொள்ளும்
          மேகங்கள் கூட
          எதனை அழகு
                       பனி மூட்டமாய்.....
         ஏதோ----
          முதல் முதலாய்
          பிறந்த உணர்வு
                       தனிமையை அடிமையாக்கி
                                  என்னையும் மறந்து......

11 November 2011

பாரதம் உந்தன் கையிலடா .. . .


பாரதம் உந்தன்
கையிலடா....
கொஞ்சம் எழுந்து
நின்று பாரடா....

சுற்றி வரும் பூமி
சுழன்றிடும்.....
சுழல செய்யும்
கால சக்கரம்
உந்தன் கையிலடா.....

சிறை வைத்த உன்
கனவுகளுக்கு...
கொஞ்சம்
உயிர் கொடுத்த பாரடா....

வாடிய பூக்கள் கூட
புதிதாய் பூத்திடும்
உன் சாதனையின்
நாளை எண்ணியே!.....

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...