கற்பனை உலகம் அது
யாரும் கண்டிடாத
அமைதியின் உலகம் அது
எல்லோர் கனவிலும்
உதயம் அது...
எல்லோர் நினைவிலும்
உதயம் அது...
ஒழுக்கத்தின் உலகம் அது
எல்லோர் மனதிலும்
உதயம் அது...
பண்பின் உலகம் அது
எல்லோர் கண்ணிலும்
உதயம் அது...
சமத்துவ உலகம் அது
எல்லோர் கையிலும்
உதயம் அது...
அன்பின் உலகம் அது
எல்லோர் பாதையிலும்
உதயம் அது...
கற்பனையின் உலகம் இது
என் கனவில் கட்டிய
உலகம் இது...