16 December 2011

கற்பனை உலகம்


கற்பனை உலகம் அது
யாரும் கண்டிடாத
உலகம் அது...

அமைதியின் உலகம் அது
எல்லோர் கனவிலும் 
உதயம் அது...

நீதியின் உலகம் அது
எல்லோர் நினைவிலும் 
உதயம் அது...

ஒழுக்கத்தின் உலகம் அது
எல்லோர் மனதிலும் 
உதயம் அது...

பண்பின் உலகம் அது
எல்லோர் கண்ணிலும் 
உதயம் அது...

சமத்துவ உலகம் அது
எல்லோர் கையிலும் 
உதயம் அது...

அன்பின் உலகம் அது
எல்லோர் பாதையிலும் 
உதயம் அது...

கற்பனையின் உலகம் இது
என் கனவில் கட்டிய 
உலகம் இது...

14 December 2011

சிட்டு குருவி


சிட்டு குருவி
சிட்டு குருவி---

எனக்கொரு
கதை சொல்லேன்
என்ன சொல்ல...!?

வட்ட வட்ட நிலவிலே
முத்தமிட்ட
அன்னை எவளோ...?
சத்தம் இட வேண்டாம்
காதில் சொலி விடு......

ம் ம் சொல்லுகிறேன்
அது ஒரு கதை அன்றோ----

கனவில் அது ஒரு அழகிய முகம்
நினைவில் அது உன் அன்னை அன்றோ

ம் ம் அப்படியா

எனக்கும் தானே
சொந்தம் என்று சொல்ல
யாரும் இல்லையே...!

         “இரு இரு
   நான் சொல்வதை கேள்....”

உன் கற்பனையின் அன்னை அவள்
உன்னை ஈன்றிடாத
தாய் அவள்....
இயற்கையும் தாலாட்டு படிட
நீயும் கற்பனையில்
செதுக்கிய உருவம் அவள்....
எந்த சிற்பியும்
செதுக்க இயலாத அழகு அவள்....

      நினைவில் உன்
      அன்னை அவள்....

கனவின் உலகம்
உன்னை வரவேற்க---
நீயும் அழகாய் தூங்கு
நானும் இங்கு உன்னுடனே
நாளைய விடியல் நமதே....!!!!!!

09 December 2011

ஏ கிளியே ---


ஏ கிளியே ---
முத்து கிழியே--
கவிதை சொல்ல
நேரம் இல்லயா---

சொல்லி விடு
ஒரு பட்டேனும்....

கேட்டு விட்டு
சொல்கிறான்...

என் காதலிடம்....

எனக்கும்
ஒரு அழகிய
நண்பன் உண்டு என்று........

07 December 2011

மனிதம் எங்கே?.....


மதி இழந்தவன்---
கதி இழந்தான்....
சதி செய்தவன்---
கதி என்ன?....

மின்னலை என்றும்
தன் வசமாக்க நினைத்தான்....
இயற்கையின் பிடியில்
சிக்கி போன இடம் எங்கே?....

அந்த வானத்தை
தொட நினைத்தான்....
விணவெளி ஓடத்தை
செய்தான்....

பறவை என
பறக்க நினைத்தான்....
பறக்கும் தட்டை
கண்டறிந்தான்....

ஆயுதம் இல்லா
உலகை தேடினான்....
எங்கும் போர்
முழக்கங்கள் தான்....
பூக்களை நேசிக்க
மறந்தவன்
மனிதனை மட்டும்
நேசித்திடுவனா...!

மலைகளிலும் காடுகளிலும்
வழ்ந்தவன்
இன்று குடிசைகளிலும்
அடுக்கு மாடிகளிலும்மாய்
கேட்டால்
நாகரீகமாம்

எது நாகரீகம்?....

இன்று
நாட்டில் இல்லா
மனிதநேயம் தான்
           நாகரீகமா...!

இல்லை
மனித இதயத்தில்
வியாதியாய்
பரவி கிடக்கும்
கொடுமைகள் தான்
           நாகரீகமா...!

கொடுமைகள் நாட்டில்
அதிகமகிட தான்
சுதந்திரம் என்னும் 
பெயரை சொல்லி
அலைகின்றானோ
மனிதன் ஆயுதமாய்....

அதன் விளைவு தான்
தீவிரவாதம் என்னும்
கொடுமையா....

முதல் சுதந்திரமோ
அகிம்சையாய்
மாலை சுடியாதோ அன்று....
இன்றோ
இரத்த கட்டாறுகளாய்....

மனிதம் அழிந்தது....
மனித நோயம் ஓய்ந்தது....

மாண்டு போகும்
உலகம் அதிலே
மயமாய் போகும்
மனிதம் எங்கே?....

நம்பிக்கை


இலட்சிய வாழ்வில்
பயணம் செய்ய---
இலட்சியங்களை தேடியே
நம்பிக்கை தான் வாழ்க்கை
என்று நினைத்தால்
அந்த வானம்
உந்தன் கையில் எட்டிடுமே...!

காலை பனி துளி
சூரியனை கண்டு
ஒளிவது போல அல்ல
நம்பிக்கை....

அது
மனிதனின்
    முதுகெலும்பு....

வாழ்வின் ஆரம்பமும்
நம்பிக்கை....
வாழ்வின் முடிவும்
நம்பிக்கை....

நம்பிக்கை
இல்லை எனில்
வாழ்வும்
வீண் தானே----

06 December 2011

காதலின் நினைவு

வசந்த காலம்
அது என் இளமை காலம்
வசந்தங்கள் வீசிய பொற்காலம்
எனக்கென்று ஒரு பரிசாய்
இறைவன் கொடுத்த
அன்பு தேவதை அவள்

வானில் பூத்த
 நட்சத்திரங்களாய
அவள் இதய வாசல் திறந்திட
புதிதாய் பிறந்த உணர்வு

ஏதோ....
பாலைவனத்தில்
ஒரு துளி தண்ணீர்
கிடைத்த இன்பம்....

கடிதங்கள் பல எழுதினோம்....
சுவாசங்களாய் வாழ்ந்தோம்....
கற்பனை உலகில் மிதந்த்ட
காதல் தோணியாய்
நானும் அவளும்

“என்னோடு அவள் வாழ்வு”


என் வாழ்வின் அர்த்தம்
சொல்லிய அவளோடு வாழ்த்திட
இன்றும்
கடிதங்கள் எழுதுகின்றேன்
அவளின் கல்லறைக்கு
கனவில் மட்டுமாவது
வந்து விடுவாளோ
என்று எண்ணியே..!..

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...