15 September 2023

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப

படிச்சவங்க கிட்ட

நம்ம எதிர் பார்க்கிறது

                               ---அன்பு...

அது மட்டும் அவுங்க

கிட்ட இல்லைன்னா

நொறுக்கி போகுமே

                     ---நம்ம இதயம்...


நீ இல்லாமல்

 நீ இல்லாமல் வாழும்---

ஒருவொரு நாளும்---

யூகங்கள் என---

கடந்திடுதே...


உன் நினைவுகளில்---

மட்டும் வாழுகிறேன்...

பல யூகளை---

கடந்தும்...

              --- கனவுகளில்---


உறவோடு வாழும் காதல்

 உறவுகளோடு வாழ---

ஆசை தான்... 

               ஆனால்...

ஏனோ சிறு

தயக்கம்....

            நீ இன்றி

   உறவுகளோடு வாழ... 


          இப்படிக்கு

                       காதல்.....


06 September 2023

மௌனம் பேசிடும்

மௌனம் பேசிடும் 

வார்த்தைகளால்---

கண்கள் 

கரைந்திடுமா...

                          இல்லை---

கண்ணால் பேசிடும்

வார்த்தைகளால்---

உன் மௌனம்

தான் கலைந்திடுமா...

                                சொல்லடி...

                   

                      மௌனமாய் இராதே

                                    உன்  

                           மௌனங்கள்

                        கூட சுமை தான்...💗💗💗


29 August 2023

காதல் தந்த வலி










காதல் தந்த வலி

தீரவில்லை---

காயம் கண்ட 

இதயம் மாறவில்லை---

வலிகளை சொல்லி அழ 

யாரும் இல்லை...


தண்ணீரில் நீந்தும் மீன் போல-- 

கண்ணீரில் நீந்துகிறேன்...

மீட்டு கொண்டு செல்லடி---

மீண்டும் என்னடி சேர்ந்து---

என் மாடி

சாய்ந்து கொள்ளடி...


நீயும் இல்லா உலகம் அதிலே

நானும் வாழ்கிறேன்...

அந்த பிரமனும் செய்த

சதி என்னடி...

ஓன்றாய் இருந்த---

நினைவுகள் மட்டும் ---

என்னை கொல்லுதடி...


வலிகளை மட்டும் சுமந்து---

நீயூம் இல்லா உலகில் மரணிக்கிறேன்... 

நானும் அங்கு உன்னுடனே...

என்னை உன் மார்போடு---

அணைத்து கொள்ளடி...


யாரும் இல்லா உலகம் அதிலே

உன்னோடு கைகோர்த்து 

விண்ணில் விண்மீன்களாய் 

சிறககடித்து பிறப்போம்....

14 April 2015

அம்மாண்ணா சும்மா இல்ல

அம்மாண்ணா சும்மா இல்ல ...
அவ இல்லனா நீ இல்ல...
உன்ன சுத்தி பாரு
அவ தான் உனக்கு
எல்லாம் ...

பத்து மாதங்களாய்
உன்னை சுமந்து ---
நீ கொடுத்த கஸ்டங்களை
இன்பமாய் எண்ணி---
தான் கஸ்டங்களை மறந்து
உனக்காக---
முத்தம் ஒன்று கொடுத்திருப்பாள்….
அதை
மறந்திருப்பாயா  நீ

அதுவோ
உன் அன்னையின்
விலையில்லா முத்தம்...

நீ அழும் வோளையிலே ---
தன் இரத்தத்தை
பாலாய் கொடுத்திருப்பாள்...

நீ வழர்ந்திட
தேயிந்த அவளுக்கு
முதியோர்  இல்லம் தான் வீடா…?

குடும்பங்களுடனே
வாழ ஆசை பட்டாள்
இன்றோ
அனாதை ஆக்கப்பட்டாள்

கண்ணிலே
தாரை தாரையாய் நீர் ஒழுக
அழுகின்றாள்

ஒரு பேதையை போல

அவள் கண்ணீரை
துடைக்க யாரும் இல்லை

தன் பிள்ளை என்று
ஒருவன் இருந்தான்

அவனோ !...

அன்னை மடிந்து விட்டாள் என்று
முதியோர்  இல்லம்
சேர்த்து  விட்டான்

பாவம்…
இந்த முதிர் வயதில்
என்ன செயிவாள்…?

தன் இளமையை
தன் பிள்ளைக்காக
விட்டுக்கொடுத்தாள்

அவனோ தன் இளமையை
சந்தேசமாய் களிக்கின்றான்
அவளுடனே,…

தன் அன்னையை
முதியோர் இல்லமதிலே
காவல் வைத்து விட்டு

தெரியாதவனாய்

அவனுக்கும்
முதிர் வயது என்று
ஒன்று உண்டு
என்று அறியாதவனாய்...

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...