29 March 2011
28 March 2011
சாம்பலாவது யார்?...
வீசும் காற்றும்...
சீறும் அலையும்...
சொல்லிடும்
தமிழின் பெருமையை.....
சிந்தும் கண்ணீரும்....
பொங்கும் எரிமலையும்....
சொல்லிடும்
எம் இழைஞனின்
வேதனையும்----
அவன் வேலைக்காக
அலையும் போர் களங்களும்...
ஆம் !...
இன்னும் உள்ளது
மனித நேயம்.....
ஆனால்
போராட்டம் முடிய வில்லை
போரிடும்
போர்க்களமே
மாறி விட்டது.....
தீக் குளியல்களும்...
கட்சி கொடிகளும்....
அரசியால் தலைவர்களுக்காக
என்ற நிலை
மாறி விட்டது....
இதோ இளைஞன்
விழித்து விட்டான்.....
அவன் முன்னே
கட்டப்ட்டிருந்த திரைகள்
எரிந்து விட்டன.....
இனி சாம்பலாவது
மனிதமும்
மனித நேயமும்
அல்ல-----
ஜாதிகளும்
கட்சிகளுக்காக எழுந்திடும்
போர்க்களங்களுமே......
27 March 2011
சிறு கவிதைகள்
பொன் என்ற வார்த்தையில்
சரணடைந்தவன்
பெண் என்ற வார்த்தையில்
பிணமானான்...
*******************************
தட்டை கொட்டினான்----
சில்லறை விழுந்தது.....
பூவை கொட்டினான்----
அடி விழுந்தது...
-முதுகில்
****************************
24 March 2011
23 March 2011
புது ஜனனத்தை தேடி
இதோ
புறப்பட்ட இதயங்கள்
வலுவிழந்து விட்டன...
ஓடி ஓடி
உழைத்தக் கால்கள்
இழைப்பை தேடி
சோர்ந்து விட்டன....
வாழ்வின் எல்லை
இதோ---
மரணம் முன்னே
பகலவன்
மறைந்து விட்டான்....
சந்திரன்
மெல்ல தலையை தூக்கி
மாலை பொழுதை
கட்டியது....
நடந்தது என்ன ?...
கூண்டை
விட்டு கிழிகள்
சுகந்திரமாய்
விட்டு கிழிகள்
சுகந்திரமாய்
பறப்பது போல -----
"உயிர்"
உடம்பென்னும்
சிறை கூண்டை விட்டு
சுகந்திரமாய் பிரிந்தது.....
பாவ உலகில்
பாவியாய் வாழ்ந்தான்....
நிம்மதி பெருமூச்சுடன்
புறப்பட்டான்....
புது ஜனனத்தை தேடி........
22 March 2011
21 March 2011
20 March 2011
உயிருள்ள உணர்வுகள்
நிறம் மாறாத
உன் விழிகளில்
வழியும் நீர் துளி
இன்று
என் விழிகளை
மட்டும் மூட செய்தது
ஏனடி--?...
விழி தெரியாமல்
வழி தேடி அலையும்
என் கண்களை
உன் கைதியாக்கி போவது
ஏனடி...?—
19 March 2011
கருவறையே கல்லறையா....
கற்ப்பும் உயிரும்
ஒன்று தானே---
அதில் தோன்றிடும்
உயிரை மட்டும்
அழிப்பதேனடி----
பெண்ணே….!
“பிறக்கும் முன்னே தங்கிய
கருவறை கல்லறையா..?--“
தாய்மை என்பது
உனக்குரிய
புனிதமான இடம்
என்று தெரியாதா…..
கண்ணெதிரே காணும்
உயிரை அழித்தால்
சட்டங்கள் பல…..
அனால்
உன்னிலே தோன்றிய
கருவும் உயிர் தானே----
அதை அழித்தாலோ--
சட்டங்கள் ஏது..?..
தண்டனைகள் எங்கே..?..
“மொடானது மலரும் முன்னே
மடிய வேண்டிய கட்டாயம்……”
ஏ சமுதாயமே--!...
அரசியல் சாசனத்தை
திருத்தி எழுது……
கருசிதைவுக்கு
மரணத்தை விட
கொடிய தண்டனை
என்று…….
12 March 2011
புது உலகம் படைக்க....
ஆயிரம் ஆயிரம்
சின்ன சின்ன
நினைவுகள் தோன்றட்டும்.......
சின்ன சின்ன
நினைவுகளில்-----
புது புது
கனவுகள் தோன்றட்டும்......
புது புது
கனவுகளில்-----
சின்ன சின்ன
மின்னல்கள் தோன்றட்டும்......
சின்ன சின்ன
மின்னல்களில்----
புது புது
கவிதைகள் தோன்றட்டும்.....
புது புது
கவிதைகளில்------
சின்ன சின்ன
கருத்துக்கள் தோன்றட்டும்......
சின்ன சின்ன
கருத்துக்களில்----
புது புது
உலகம் தோன்றட்டும்........
10 March 2011
என்னோடு உன் காதல்
நீ எந்தன் வானில்
வந்த விண்மீனா--------
நிலவும் தான் இன்று
கலைகிறது----
உன் விழி கண்ட
வெட்கத்தில் ----
மேகங்களின் இடையே
ஒளிந்து கொண்டு.......
மேகங்கள்
என்ன செய்யும்?....
ஒளிவதற்கு இடம்
இல்லையே...!
உனக்கு ஒன்னு
தெரியுமா----
நீ அந்த
பிரம்மன் படைத்த
அழிகிய சிற்பம்......
எனக்காக எழுதப்
பாடாத காவியம்.....
காதல் என்னும்
வலைக்குள்ளே
பின்ன பட்ட
ஓவியம் ......
வாழ்க்கை என்னும்
காகிதத்தில்----
கலைக்கப்பட்ட ஓவியமாய்
நம் காதல்.......
நீயும் சென்றாய்
சிரித்துக் கொண்டு.....
புரிந்து கொண்டேன்----
வேசம் என்று.......
நீ என்னை கண்ட
அந்த சிறு நொடியில்....
Subscribe to:
Posts (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
கற்ப்பும் உயிரும் ஒன்று தானே --- அதில் தோன்றிடும் உயிரை மட்டும் அழிப்பதேனடி ---- பெண்ணே ….! “ பிறக்கும் முன்னே தங்கிய கருவறை கல்லறைய...
-
புன்னகை கண்டு மயங்காதே------ கண்கள் கண்டு கரையாதே------- காதல் என்பது சுகம்தான்…….. அதற்காக வாழ்க்கை எனபது சுமை அல்ல காதலில் விழுந்து வாழ்க...
-
நீ பிறந்தாலே செலவு என்று எண்ணி உன்னை கருவிலே அழிக்க நினைப்பவரை மன்னியாதே கன்னிப் பருவுமதிலே எத்தனை கனவுகள் அதை சுட்டெரிப்பத...