14 April 2011

அரளி பூ வசம் தான்....


அரளி பூ வசம் தான்

அனால்

கனிந்திடும் கனியோ----


அரளி பூவின் வாசத்தை விட

எழுந்திடும்

போர் கொடிகள் எத்தனை..?.....

கட்சிக்காக


பேனா பிடிப்பவன்

கைகளில்

கட்சிக் கொடிகளா------ 


பாவம்

வாழ்வை தொலைக்க

வேண்டிய அவலம்…..


கந்தல் ஆடை உடன்

வருபவனை

கட்டுகள் காட்டி

கட்சியை வளர்க்கும்

கட்சிகாரர்கள்……


தலைவனுக்காக

தன்னையே அழிக்கும்

மூடர்கள்

இங்கு மட்டுமா-----


சாதிக்கொரு கட்சி……

வீதிக்கொரு கட்சி…..

எதற்கு…?....


சரித்திரம் படைத்த தலைவர்கள்

பல வாழ்ந்த

நாடு இது

அதை சுட்டெரிக்க துடிப்பதேன்…?....


மெள்ளமே சுரண்டி

வெள்ளாமை எடுத்து

மக்களை ஏமாற்றுவதா ------


இவர்களை தண்டிக்க

சட்டங்கள் ஏது…?....

பட்டங்கள் பெற்ற

சட்ட மேதைகள் கூட

இவர்கள்

கை கூலியாம்…….


கடவுளென நினைக்கும்

சட்டங்களே

சதி இடம் ஆனால்


                   திட்டங்கள் என்று சேர்ந்திடும்......

                               குடிசைகள் என்று மலர்ந்திடும்......

                                                      நாடு என்று வளர்ந்திடும்...... 

4 comments:

  1. கலக்கீட்டீங்க ரொம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  2. சட்டங்களை திருத்தும்! அதிகார தீர்மானத்தை , பிடுங்குங்கள் முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து.. பின்னர் கைக்கூலிகளா கைக்கு விளங்கிடும் வேலிகளா என விவாதிப்போம் ......

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...