17 February 2013

முதல் சந்திப்பு

யூத்தம் ஒன்று வருது
சத்தம் இல்லாமல்---
நிசப்தனாய் நான் இங்கு...
அவள் பார்வையில்
சிறை வைக்க பட்டேன்...
அது ஒரு அழகிய சிறை வாசம்
என் வாழ்வில் கண்டிராத
பொன்வசந்தம்

அவளின் ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னை கண்டதும்---
சற்றே மறைந்து கொள்கிறாள்...

வெட்கத்தில் நாணியே
தலை குனிந்தவளாய்
என் அருகே---
அதுவே என்னவளின்
முதல் சந்திப்பு...

10 February 2013

உன் பாத சுவடுகள்


உன் பாத சுவடுகள்
ஒவ்வொன்றும்
எனக்கு பாசறைகளா---
இல்லை
எனது வாழ்க்கைகா...

இதோ !---
தனிமை என்னை வாட்டிட
உன் பாத சுவடுகளை
தேடியே...

உன் அருகில் இருத்தாலும்
சூரியன் என சுட்டெரிக்கின்றாய்---
வெகுதூரமாய் சென்றிட
காலன் என்னை தேடியே---

உன்னிடம் இருந்து
என்னை பிரித்து கொள்ள...

எனக்கு தெரியும்---

ஜெனனம் என்று ஒன்று உண்டென்றால்
மரணம் என்று ஒன்று உண்டென்று...”

ஏனோ !
உன்னை விட்டு பிரிகையில்
மரணம் இல்லா வாழ்வுக்கு
ஒரு அசை தான்...

உன் நினைவுகளோடு
மட்டும் வாழ்ந்திட---

09 July 2012

காவியம் சொன்ன காதல்


காவியம் சொன்ன காதல் இது....
காலம் சொன்ன பாடம் இது....
காதல் ஒரு சில்வண்டு
அதை மொய்த்திட ....
கிடைத்தோ புதிய ஆநந்தம்....

பூக்களை  எல்லாம்
பர்த்திருக்கிறேன்....
அனால்
ஏனோ ரசிக்கவில்லை
இன்று நேசிக்கிறேன்....
என்னோ தெரியவில்லை....

இது தான் காதலா....
புதிதாய் பிறந்து விட்டேன்....
உன்னுள்ளே....  
பிறந்த காதலை பறித்துவிடடாய்
நீ உன்னுள்ளே....
 
இன்று நாம்
காதல் என்னும் பூ உலகில்
ஒன்றிணைந்துள்ளோம்....

காலம் எல்லாம் நம் காதல்
பூத்து மலர்ந்திட
இறைவனை வேண்டி கொள்கிறேன்....

30 June 2012

வாழ்க்கை என்னும்


வாழ்க்கை என்னும்
சிறை கூண்டில் பயணித்தேன் ….
சுற்றியும் முற்றியும்
இருட்டறைகள் …..

ஓடுகிறேன் ஒழியை தேடியே---
ஓடி ஓடி கால்களும்
தளர்ந்து விட்டது…..

மன வலிமையும்
குறைந்து கொண்டே
போகிறது…..

வாழ்க்கை என்னும் பயணம்
என்னை துரத்திட---

ஓடுகிறேன் ஓடுகிறேன்
தினமும் பல இடங்களுக்கு
என் வாழ்வை தேடியே…..

02 April 2012

பார்த்து கொண்டே.....

பார்த்து கொண்டே இருதான்....
பல நிமிடங்கள்...
எழுந்து சென்றாள்....
அவள்.....
மீண்டும்
பார்த்து கொண்ட இருதான்.....
சற்றே நின்று திரும்பி பார்த்தாள்...
மனதில் திட்டியவளாய்....
அவன்
குருடன் என்றும் அறியாமல்....

01 March 2012

காளிகேசம்

பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

பத்மனாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும்.

பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும் வகையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 50 கட்டணம் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. தக்கலையில் ரூ.150 முதல் வாடகை உள்ள லாட்ஜ்கள் உள்ளன.

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...