அனனை சொல்லும்
பாட்டு தாலாட்டு----
மழலை எழுந்திட
அமைதியாய் தூங்கவைக்கும்
பாட்டு அது தாலாட்டு……
கொஞ்சி பேசும்
மழலை கேட்கும்
பாட்டு தாலாட்டு-----
மன அமைதியாய்
தூங்க வைக்கும்
பாட்டு அது தாலாட்டு………
கண்களை மெல்ல
அசர வைககும்
பாட்டு தாலாட்டு-----
மழலை இனிமையாய்
கேட்டு ரசிக்கும்
பாட்டு அது தாலாட்டு……..
அராராரோ பாடிட
தாயும் இங்கு
இல்லையே
சேயும் வளர்ந்தது
தனி மரமாய்……
பெற்ற அன்னை
சென்றதோ வெகு தூரம்……
உன்னையும் குப்பை
என கூடையில்
இட்டு சென்றாளே------
அறியா வயதில்
செய்த தவறினை
திரித்திட யாரும்
இங்கு இல்லையே…….
விரலை எடுத்து
ஒன்று இரண்டு
எண்ண வேண்டிய வயதில்
சிறை கம்பிபய
எண்ணி பளுதடைந்து
போனானே……..
No comments:
Post a Comment