23 February 2011

புதைக்கப் பட்ட உலகம்




விழிக்கத் துடிக்கும்
கண்களுக்கு---- 
சாந்து பூசும்
உலகமடா இது……

இரு விழி
ஒன்று மூடிட-----
மறு விழி
ஒன்று துடித்திட------
கரு விழி
இரண்டும் கலங்கிட-------
நெஞ்சுருகும்
வேதனையடா இது…….

கரங்கள்
இரண்டும் துடித்திட------ 
கால்கள்
இரண்டும் கட்டிட------
பணக்கட்டுகளால்
புதைக்கப்பட்ட உலகமடா இது

புதைக்கப்பட்ட
பணக்கட்டுகளின் அடியில் 
கேட்டதோ
சில்லறை சத்தம்…..

சிந்திக்க நேரம் இல்லை 
சங்கதிகள் பல சொல்லாம்

சந்திக்க வந்வர்களோ!.....
வெள்ளாடை போர்த்தி----- 
வெள்ளாமை எடுத்து----
சந்ததிகளை காக்கும் ----
நய வஞ்சகர்கள்…….

இதை சிந்திக்க சொன்னால்
பட்டங்கள் பல கிடைத்திடும் ......
சட்டங்கள் கூட
பணக்கட்டுகளில் புதையுண்டு…---
விழித்திரை யாவும்
கலங்கிடும் 
குடிசைகள் யாவும்
விழித்திடும் வரை----- 
இந்த உலகம்
புதையுண்ட உலகமே!------
மனிதர்கள் யாவரும்
புதைக்கப் பட்ட
நடை பிணங்களே------

2 comments:

  1. விழிகள் துடிக்கும்
    ஓசை
    செவிகளுக்கு புரிவது
    இல்லை
    கண்களில் வர்ணங்கள்
    உற்று நோக்கிடுவார்
    கலங்கிடும் கண்களை
    எறேடுத்துப்பாரர்
    சாந்து பூசிய
    முகமே சகவாசங்கள்
    சந்தானம் எதுவென்று
    இன்னும் புரிந்திடார்
    இவ்வுலகில்
    விந்தை உலகமென்று
    சொல்வதில் வியப்பில்லை
    என்கிறாள் புங்கை

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...