நெஞ்சம் என்னும்
கூட்டினிலே-----
தஞ்சமாயி வந்தவளே-----
எல்லாம் வஞ்சம்
என்று சொல்லிட-----
நெஞ்சம் இங்கு
வலிக்குதடி……..
உன் சிந்தனையில்
ஒரு போராட்டம்……
சந்திக்க
மறுத்து விட்டாயே------
நானோ இங்கு
நினைவுகளுடன்------
உன் கனவுகளில்
தலை சாய்த்து
துய்ல் எழ--------
நீயோ அங்கு ஒன்றும்
அறியாதவளாய்-------
இன்னும் எத்தனை
காலம் தான்
இந்த வேதனை
சொல்
பெண்ணே--!...
சொல்------
என் இதயம் ஒன்றும் ஊஞ்சல் அல்ல
நீ ஆடி விடு செல்ல----
அது
அழகிய கனவுகள்
பூத்து கிடக்கும்
ஒரு பூந்தோட்டம்……..
இன்றோ அதில்
உன் நினைவுகள் என்னும்
வண்டுகள் பல----
என் கனவுகள் என்னும்
பூக்களை
மொய்த்து கொண்டு......
போதும் .........
என் உயிரை உறிஞ்சும்
அழகிய பூக்களின்
மகரந்த தூளையவது
விட்டு விட்டு செல்
சற்றே துடித்து கொண்டு
இருக்கட்டும்
இந்த அழகிய பூந்தோட்டமும்………
அதில் பூத்து கிடக்கும் பூக்களும்………
No comments:
Post a Comment